திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். இந்நிலையில் தரிசன வழிகள், வெளி பிரகாரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து அவர்கள் முருகப்பெருமானை தரிசித்து சென்றனர். மேலும் காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்ததால் முதியவர்களும், குழந்தைகளும் மிகவும் சிரமப்பட்டனர்.