கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து இடங்களையும் பார்த்து ரசித்து விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் சுற்றுலா பேருந்தில் அவர்கள் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வரதமாநதி அணைப்பகுதியில் இருக்கும் வளைவில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.