திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மழை பெய்தது. ஆனால் திருநெல்வேலி டவுனில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அரசன் நகர் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. மழை நீர் தாழ்வான இடங்களில் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தேங்கியிருக்கும் தண்ணீரை ஓடைக்கு திருப்பி விட மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.