ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 35 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தரிசனம் முடிந்து மினி பஸ் மூலமாக ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி-நெல்லை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பணக்குடி அருகே சென்றபோது கிளீனரான கிருஷ்ணா என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கிருஷ்ணா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.