மதுரை மாவட்டத்திலுள்ள பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பஞ்சாமிர்தம் விற்பனை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக 5 மாதங்களில் 13 லட்சம் பஞ்சாமிர்தம் விற்பனையானது. இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் பஞ்சாமிர்த விற்பனை 20 லட்ச ரூபாயை எட்டியுள்ளது.

250 கிராம் பஞ்சாமிர்தம் 30 ரூபாய்க்கு, 500 கிராம் பஞ்சாமிர்தம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது முருக பக்தர்கள் ஐயப்ப பக்தர்கள் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் விரும்பி பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்வதால் விற்பனை அதிகரித்திருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.