கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று மதியம் 2 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதனையடுத்து வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.