திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.பாறைபட்டியில் இருக்கும் விநாயகர் கோவிலில் யார் பூசாரியாக செயல்படுவது என்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த மாதம் 31-ஆம் தேதி கோவில் திருவிழா தொடங்கியதும் அதே பகுதியில் வசிக்கும் பூமி ராஜன் மற்றும் அவரது தரப்பினர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்துள்ளனர்.

அப்போது எதிர் தரப்பை சேர்ந்த தனபால் உள்ளிட்ட சிலர் சாமி கும்பிட வந்த போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த பூமிராஜ், தனபால் உள்பட 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனித்தனியாக வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் இருதரப்பைச் சேர்ந்த 14 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.