கோவை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 6 மாத கைக்குழந்தை ஒன்று  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை போடிபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 6 மாத கைக்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்நிலையில், கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த கார் திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.