திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் கிராமத்தில் ராஜசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக ராஜசேகரன் சென்னையில் இருக்கும் இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சென்னை வந்தவாசி சேர்ந்த பெண்ணுக்கும் ராஜசேகரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டி காதலாக மாறியது. இதனையடுத்து சொந்த ஊருக்கு வந்த ராஜசேகரன் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ராஜசேகரனுக்கு உறவுக்கார பெண் சித்ராவுடன் திருமணம் நடைபெற்றது. தனது திருமண புகைப்படங்களை ராஜசேகரன் செல்போன் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் ராஜசேகரனிடம் இது குறித்து கேட்டுள்ளார். மேலும் ராஜசேகரனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சித்ரா மற்றும் உறவினர்களின் செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சித்ரா தனது கணவரிடம் கேட்டதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. மேலும் கோபத்தில் சித்ரா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜசேகரன் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜசேகரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.