புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெறவில்லை என்பதை கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கருப்பு சட்டை மற்றும் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு பதாகைகளுடன் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ஊராட்சி நிர்வாகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள், ஊராட்சி வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு கொண்டு வந்தோம் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.