புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான மணிகண்டன் என்பவர் ஹாங்காங் நாட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக மணிகண்டனும், அந்த நாட்டைச் சேர்ந்த செல்சீ என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு விட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி காதலர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அவர்களை அனைவரும் வாழ்த்தி உள்ளனர்.

மேலும் வெளிநாட்டு பெண் தமிழர்களின் பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதனை தொடர்ந்து மண்டபத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மணிகண்டனின் உள்ளூர் நண்பர்கள் “கடல் கடந்து பயணித்த காதல்… கரை திரும்பிய காவியம்…” என்ற வாசகத்துடன் இந்திய தேசிய கொடியையும், ஹாங்காங் நாட்டு தேசிய கொடியையும் இணைத்து வைத்துள்ளனர்.