நீலகிரி மலை ரயிலை ரூபாய் 3.60 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்று ஊட்டி மலை ரயில். ஆசியாவிலேயே ஊட்டி மலை ரயிலில் தான் பல்சக்கர தண்டவாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய அந்தஸ்து வழங்கியுள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர் ரூபாய் 3.60 லட்சம் செலுத்தி இந்த மலை ரயிலை நேற்று வாடகைக்கு எடுத்தனர். காலை 10 மணிக்கு கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூறுக்கு இந்த மலை ரயில் புறப்பட்டது. இதில் 16 பேர் கொண்ட குழுவினர் மட்டுமே பயணம் செய்தனர். குகை, பாலம், வனவிலங்குகள், இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தவாறு உற்சாகமாக பயணம் செய்தனர்.

மதியம் 1:30 மணி அளவில் குன்னூர் வந்தடைந்தனர். குன்னூரில் பாரம்பரியமிக்க மலை ரயிலில் லோகோ பணிமனையை பார்வையிட்டு நூற்றாண்டு பழமைமிக்க இயக்கத்தைப் பற்றி கேட்டறிந்து குன்னூர் ரயில் நிலையத்தை பார்வையிட்டனர். மேலும் அவர்கள் இதில் பயணம் செய்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.