பொது சந்தை திட்டத்தில் கோதுமையின் மொத்தம் மற்றும் சில்லறை விலையை குறைக்கும் விதமாக மத்திய அரசு 30 லட்சம் டன் கோதுமை விற்பனை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து உணவு கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகப் பொது மேலாளர் கூறியதாவது, உள்நாட்டில் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்து கோதுமையின் மொத்த மற்றும் சில்லரை விலையை குறைக்கும் விதமாக கையிருப்பில் இருக்கும் கோதுமையை விடுவிக்க இருக்கிறோம். அதேபோல் பொது சந்தை திட்டத்தில் 30 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்திய உணவுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டலத்தின் சார்பாக தரமான மற்றும் சராசரி கோதுமை தளர்வு அடிப்படையிலான கோதுமை போன்றவற்றை மொத்த விற்பனைக்காக பொது சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான ஏலங்கள் இந்திய உணவுக் கழகம் http://www.valuejunction.in./fci என்ற இணையதளத்தின் மூலம் நடத்துகிறது. இதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் www FCI.gov.in அல்லது http://www.valuejunction.in/fci என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என இந்திய உணவு கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகப் பொது மேலாளர் கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் நடவடிக்கையால் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.