எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஓபிஎஸ் க்கு பதில் ஆர்பி உதயகுமாருக்கு வழங்க அதிமுக கோரிக்கை வைத்தது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக இதுவரை 10 முறை கடிதம் அளித்துள்ளோம். ஓபிஎஸ் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பேரவையில் இபிஎஸ் கோரிக்கை வைத்தார்.

ஒருவர் எந்த சின்னத்தில் வென்று பேரவைக்குள் வருகிறாரோ,  அதே சின்னத்தில் தான் கடைசிவரை பார்ப்போம் என சபாநாயகர் பதில் அளித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை.

இருக்கை விவகாரத்தில் நான் வீம்புக்காக செய்யவில்லை, சட்டப்படி நடக்கின்றேன். யாருக்கும் சிறு மனக்குறை வரக்கூடாது என்று தான் இந்த அவையை நடத்தி வருகிறோம். இடையூறு செய்ததாலேயே வெளியேற்ற உத்தரவிட்டேன். இனி இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை என அப்பாவு தெரிவித்தார்.