11 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் மற்றும் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். திமுக எம்பி ஆ. ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக விமர்சித்துள்ள அண்ணாமலை, ஊழல்வாதிகளின் கூடாரமாக திமுக உள்ளதாகவும் நிர்வாகிகள் பலர் மீது பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

நீதிமன்றத்திலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. பலர் மீது பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்ததற்காக தமிழக மக்களிடம் திமுக தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.