செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டாஸ்மார்க் மேம்பாடு அடைவதற்கு…. அதுல பாத்தீங்கன்னா,  வருமானம் பெருக்குறதுக்கு , என்ன மாதிரி விளக்கு எல்லாம்  கொடுக்கிறாரு, என்ன மாதிரியான யூ-டர்ன்  எல்லாம் அடிக்கிறாரு, சரியான யூ-டர்ன். ஏழு மணிக்கு வந்து கடையை திறப்பேன்னு சொன்னாரு…  நான் சொல்லல,  அது நேத்தோட போச்சு என சொன்னாரு. அது காத்தோட போச்சு அது…

அப்புறம் பல்டி அடிச்சாரு. இப்ப என்ன சொல்றாரு? எண்ணாக… நீங்க காலையில போய் குடிக்கிறவங்களை  விமர்சனம் பண்றீங்க,  காலையிலேயே குடிச்சு போறது என்ன தப்புங்குறாரு? குடியை  நியாயப்படுத்தி, குடியை மேம்படுத்தி… குடிகாரரா தமிழ்நாடு உருவாகனும் சொல்லிட்டு,  அந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்ற அண்ணனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்…

ஓபிஎஸ் யாருங்க… who is he ..அவருக்கும் கட்சிக்கும் என்ன  சம்பந்தம் இருக்கு. பாஜக எப்படி அழைப்பாங்க. அவர் ஒரு தனி மனிதர்,  இயக்கம் கிடையாது. இயக்கமாக இருந்தால் அழைப்பாங்க, தனி மனிதரை அழைக்க மாட்டாங்க என தெரிவித்தார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருவரும், சேகுவாரா – பிடல் காஸ்ட்ரோ என நீங்க தான சொன்னீங்க என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு… ஒரு கல்யாணத்துக்கு வந்தா ?  நான் உன்ன பத்தி நாலு வார்த்தை பேசிட்டு தானே வருவேன். நீ வீரன், நீ சூரன் என பேசிட்டு தானே வருவேன். பேசாம இருப்பனா… ஒரு நிகழ்ச்சியின் போது பாத்தீங்கன்னா…. அவருக்கு ஒரு சிறப்பு கொடுக்கணும், அந்த வகையில தான் எடுத்துக்கணுமே ஒழிய… இவங்க எல்லாம் எப்படிப்பட்ட வில்லாதி வில்லன், சூராதி சூரன் என  உலகத்துக்கே தெரியும் என தெரிவித்தார்.