தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 47,934  மாணவர்களுக்கு  நடத்தப்பட்டது. இவர்கள் அதே கல்வியானின் மேற்படிப்பு தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜூன் மாதமே தேர்வு நடத்தப்பட்ட நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வெண், பிறந்த தேதி பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.