காட்பாடி மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 24 அதாவது இன்று முதல் ஜூலை 30-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு தினமும் காலை 10.55 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே மறு மார்க்கமாக காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு தினமும் பிற்பகல் 3 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஜூலை 24ஆம் தேதி முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு தினமும் காலை 5.30 மணிக்கு புறப்படும் இன்டெர்சிட்டி விரைவு ரயில் ஜூலை 24 முதல் ஜூலை 30-ம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறு மார்க்கமாக இந்த ரயில் திருப்பதியில் இருந்து புறப்படுவதற்கு பதில் காட்பாடியில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.