கடந்த வருடம் ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லுபடியாகும் எனவும் அதை ஏற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை அப்படியே ஏற்பதாகவும் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து உள்ளது. இந்த நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது ” உச்சநீதிமன்றத்தின் சார்பாக அற்புதமான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

நீதி மற்றும் உண்மை தான் வென்றுள்ளது. அ.தி.மு.க-வை பொறுத்தவரையிலும் ஓபிஎஸ்-க்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் முன்பே அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடியாகும் என்பதால் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் நீக்கப்பட்டது, நீக்கப்பட்டதுதான்” என்று அவர் பேசினார்.