பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்திற்கு வருகை புரிகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி சென்னைக்கு வரும்போது அவரை சந்திப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுக்க இருக்கிறார்.

அதன்படி நீட் தேர்வு விலக்கு மசோதா, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுக்க இருக்கிறார். இதேபோன்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காததால் நேரடியாக பிரதமர் மோடியை நாட இருக்கிறார் முதல்வர். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் தொடர்பான மனுவையும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கொடுக்க இருக்கிறார்.