தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் இன்று முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன்பிறகு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதே சமயம் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது ‌