காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி சென்னைக்கு வரும் நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் GoBackModi போன்ற பாதகைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்துகிறார்கள். மேலும் இதனால் தற்போது பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.