கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி குமரன் நகரில் ஆட்டோ டிரைவரான மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மோகன்ராஜ் திருப்பூர்-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தொப்பம்பட்டி வாய்க்கால் மேடு அருகே சென்ற போது மாரிமுத்து என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோகன்ராஜின் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரிமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.