கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ஆர்வி ரவுண்டானா பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி நேற்று முன்தினம் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். ஆனாலும் அவர் கீழே இறங்க மறுத்து திடீரென உயர் அழுத்த மின் கம்பியை தொட்டதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைனா மஜ்ஹி(48) என்பது தெரியவந்தது. இவர் கட்டிட வேலைக்காக கோவைக்கு வந்துள்ளார். பின்னர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை மிரட்டல் விடுத்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.