கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் வடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுமியை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் எஸ்.ஏரிபாளையம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியரான விஜயராமன்(21) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் விஜயராமனை போலீசார் கைது செய்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்.