கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த பத்து நாட்களாக தினேஷ் சரியாக கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெங்கடேசன் தனது மகனை கண்டித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த தினேஷ் தனது வீட்டு குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தினேஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தினேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.