கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் ஐயப்பன் கோவில் வீதியில் நிர்மல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்மல்ராஜ் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் நிர்மல்ராஜ் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார்.

அப்போது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதை பார்த்து நிர்மல்ராஜ் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள மாட்டாயா எனக் கூறி தனது மனைவியை கண்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் நிர்மல்ராஜ் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். சிறிது நேரத்தில் நந்தினியின் செல்போன் எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் இதுதான் நான் உங்களுக்கு கடைசியாக அனுப்பும் மெசேஜ் எனக்கு குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மல்ராஜ் பதறியடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மனைவி தூக்கில் தொங்கியதை அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.