திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு பள்ளி தெருவில் கூலி வேலை பார்க்கும் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி மணி காய்கறிகளை வாங்கிக்கொண்டு சேத்துப்பட்டு நான்கு வழி சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மணி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.