சேலம் மாவட்டம் காமலாபுரத்தில் விமான நிலையம் அமைந்துள்ள நிலையில் எங்கிருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பாக தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் கடந்தும் மீண்டும் விமான சேவை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் மாதத்தில் இருந்து சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க இரண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.