சேலம் மாவட்டத்தில் உள்ள காப்பரத்தம்பட்டியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த ஒருவர் உங்களது மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்றால் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி பழனிச்சாமி அவரது மனைவி செல்லம்மாள், மகன் செல்வராஜ் ஆகிய மூன்று பேரும் பூஜையில் அமர்ந்தனர். அந்த நபர் மூன்று பேரின் தலையிலும் ஒரு குச்சியை வைத்துள்ளார். சிறிது நேரத்தில் மூன்று பேரும் சுயநினைவை இழந்தனர்.

பின்னர் அவர் பூஜையில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனையடுத்து கண்விழித்து பார்த்த மூன்று பேரும் பரிகாரம் செய்வதாக கூறி மோசடி செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பரிகாரம் செய்வதாக கூறி பணம் மற்றும் நகையை சுருட்டியது திருச்சியை சேர்ந்த பிரசாந்த் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.