சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பொன்னகரம் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பும் அலுவலகத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு காரைக்குடி பாரி நகரைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் சண்முகநாதன் தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலமாக அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதனை நம்பி சரவணன் 12 லட்சம் ரூபாய் பணத்தை சண்முகநாதனிடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதுகுறித்து சரவணன் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.