கடலூர் மாவட்டத்தில் உள்ள மந்தாரக்குப்பம் அண்ணா நகர் பகுதியில் தேவா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 24-ஆம் தேதி தனது பிறந்த நாளை நண்பர்களுடன் மந்தாரக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏன் இவ்வாறு நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள் என தட்டி கேட்டனர். அப்போது தேவா நாங்கள் ரவுடி என கூறியதுடன் கத்தியை காட்டி போலீசாரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தேவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.