கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரமணமுதலில்புதூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஹக்கீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் ஹக்கீம் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

மேலும் இருசக்கர வாகனத்தை அடகு வைத்து அதனை திருப்ப முடியாமல் ஹக்கீம் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹக்கீம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.