கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அழகப்பா லே அவுட் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி நடராஜன் வீட்டை போட்டுவிட்டு சொந்த வேலை காரணமாக குடும்பத்தினருடன் அரவக்குறிச்சிக்கு சென்று விட்டார். நேற்று மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த நடராஜன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 1 பவுன் தங்க நகை, பத்தாயிரம் ரூபாய் பணம், ஒரு மடிக்கணினி ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நடராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.