தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு ராமசாமிபுரம் அய்யா கோவில் தெருவில் சக்திவேல் துரை(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரும் அக்காள், தங்கையை திருமணம் செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேலுக்கும் அவரது மனைவி ரோஸ்லீனுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ரோஸ்லின் தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

இதில் கோபமடைந்த சக்திவேல் நேற்று முன்தினம் தனது மாமனாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். இதனை சக்திவேல் துரை கண்டித்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் சக்திவேல் சக்திவேல் துரையை தகாத வார்த்தைகளால் திட்டி கல்லால் தாக்கினார். இதனால் காயமடைந்த சக்திவேல் துரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.