தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோயில் பிள்ளை நகரில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி வேலை முடிந்து வெங்கடேஷ் வீட்டிற்கு வந்தார். அதன் பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் வெங்கடேஷ் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அவரது இறப்பிற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.