திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் சுடுகாடு அருகே நேற்று வாலிபர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் வடக்காடு கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பது தெரியவந்தது. இவர் மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். பின்னர் காதலர்கள் தனிமையில் இருந்ததால் அந்த இளம்பெண் கர்ப்பமானார்.

அதன் பிறகு சந்தோஷ் பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். கடந்த மாதம் ஒரு கோவிலில் வைத்து அந்த பெண்ணுக்கும் சந்தோஷுக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்தனர். அதன் பிறகு சந்தோஷ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சந்தோஷின் தாய் மாலா தனது மகனின் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.