திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் சிவன்நாதபுரம் கணபதி நகரில் கருப்புசாமி- கண்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகான்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகன் கார்த்திகேயன் விசைத்தறி மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கார்த்திகேயன் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாலும், நடவடிக்கை சரியில்லாததாலும் கார்த்திகேயனின் காதலி அவரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகேயன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திகேயனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.