திருச்சி மாவட்டத்தில் உள்ள நன்னிமங்கலம் கிராமத்தில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் ஆழ்துளை கிணற்றில் ஏதோ பொருள் சிக்குவது போன்று உணர்ந்தனர்.

அதனை வெளியே எடுத்து பார்த்தபோது அது அம்மன் சிலை என்பது தெரியவந்தது. அந்த சிலையின் கைகள் சேதம் அடைந்திருந்தது. இதுகுறித்து அறிந்த வருவாய் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் குணசேகரன், வினோத் மற்றும் போலீசார் அங்கு சென்று அரை அடி உயரமுடைய ஐம்பொன்னாலான அம்மன் சிலையை மீட்டு தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.