தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சிவக்குமார் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இவர் தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி செல்லும் அரசு பேருந்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது செல்போனில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார்.

இதனை ஒரு பயணி செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் அரசு பேருந்து நிர்வாகம் சிவகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.