கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இனாம்குட்டப்பள்ளி கிராமத்தில் விவசாயிகளான சிவக்குமார், சீனிவாசன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே நிலப்பிரச்சனை காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவக்குமார் பொக்லைன் இயந்திரம் மூலம் சீனிவாசன் நிலத்தில் இருக்கும் பயிர்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இதில் சிவக்குமாரின் தம்பி சுரேஷ், சீனிவாசனின் தாய் லட்சுமியம்மா ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார் சீனிவாசன், சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.