தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூதலூர் அருகே விளம்பகுடி மேலகாலணியில் பெரியசாமி என்பவரது மகன் சந்தோஷ் வசித்து வருகிறார். இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்திருக்கிறார். இந்நிலையில் மாணவிக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை  பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிகிச்சையில் இருந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர். அதனை தொடர்ந்து சந்தோஷ் மீது போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை  போலீசார் வலை வீசி  தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.