உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண்ணுக்கும் குடும்பத்தார் சம்பந்தத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. மணமகன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத நிலையில் மணமகள் வீட்டாரிடம் நன்றாக படித்தவர் என்று பொய் கூறியுள்ளனர் திருமண நாளில் மாலை மாற்றும் நிகழ்வுக்கு முன்னர் மணப்பெண் வருங்கால கணவரிடம் இரண்டாம் வாய்ப்பாட்டை ஒப்பிக்க சொல்ல அவரோ திருத்திருவென முழித்தார். இதனால் படிப்பறிவு இல்லாதவரை மறக்க முடியாது என்று அந்தப் பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.