மத்திய பிரதேசம் மாநிலத்தில் பர்வாணி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 85 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியில் உள்ள மற்றொரு பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 75 பேரில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள பள்ளி கல்வித்துறை, பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்துள்ளது.