தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் காரில் தங்களுடைய சொந்த வேலைக்காக கேரளாவிற்கு சென்று உள்ளனர். அப்போது கேரள எல்லையில் அவர்களது காரை நிறுத்திய போலீசார் கேரளா மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக கூறி டயர் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என மொத்தமாக 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு முன்னாள் சென்ற கேரளா பதிவு எண் கொண்ட வண்டியை மடக்கி அபராதம் விதிக்காமல் எங்களுக்கு மட்டும் அபராதம் விதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.