டெல்லி காங்கிரஸ் மாநிலத் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், மக்களவைத் தேர்தலில் அறிமுகம் இல்லாதவர்களை கட்சித் தலைமை களமிறக்கியுள்ளது என அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.