திருச்சி மாவட்டத்தில் உள்ள சோழன் நகரில் இருந்து பொன்நகர் வரை மழை மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராம்ஜி நகர் மெயின் ரோட்டில் இருக்கும் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த முருகன் கோவிலின் முன்பகுதியை இடித்து அகற்றுவதற்கு அதிகாரிகள் சென்றனர்.

அவர்களை அந்த பகுதி மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன், மேற்கு தாசில்தார் ராஜவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.