திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெம்பாக்கம் தாலுகாவில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனியார் பயிற்சி மையத்தில் செவிலியர் படிப்பை படித்து வருகிறார். இவருக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெறுவதாக சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வெம்பாக்கம் வட்டார ஊர்நல அலுவலர் லலிதா தென்கழனி கிராமத்தில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்று 17 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார். இதனையடுத்து பெற்றோருக்கு அறிவுரை கூறி எச்சரித்து சிறுமியை திருவண்ணாமலையில் இருக்கும் காப்பகத்தில் தங்க வைத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மணமகன் மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.