திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேசையாபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஏர்வாடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் முகமது அலி உசேன் என்பது தெரியவந்தது.

இருவரும் சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அப்துல் ரகுமான் உட்பட 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.