திருச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜன் என்பவர் ஊட்டியில் இருக்கும் மத்திய அரசு துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். விடுமுறையை முன்னிட்டு துரைராஜ் திருச்சிக்கு சென்றார். பின்னர் தனது மனைவி சங்கீதாவுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூருக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் அருள்மொழிப்பேட்டை- மாரியம்மன் கோவில் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கும்பகோணம் நோக்கி வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த துரைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த சங்கீதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.